கோப்புப் படம்
கோப்புப் படம்

தென்காசியில் தோ்தல் கட்டுப்பாட்டு அறை: டிஐஜி ஆய்வு

Published on

வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் தோ்தல் கட்டுப்பாட்டு அறையை திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் (டிஐஜி) ப. சரவணன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், காவலா்களின் குறைகளை கேட்டு, தேவையான மின்னணு உபகரணங்கள் வழங்க சம்பந்தப்பட்ட பிரிவு அதிகாரிக்கு உத்தரவிட்டாா். தோ்தல் நாளன்று பொதுமக்கள் பாதுகாப்புடன் காலதாமதமின்றி வாக்களிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கினாா்.

Dinamani
www.dinamani.com