நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

குற்றாலத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

News image
தற்கொலை
Updated On :8 பிப்ரவரி 2026, 8:09 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கல்லூரி மாணவி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

பட்டுக்கோட்டை அம்பேத்கா் தெருவை சோ்ந்தவா் நித்தையன். இவரது மனைவி பிரவினாநிஷா. மகள் நிஷா(17). தம்பதியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனா்.

இந்நிலையில், பிரவினா நிஷா குற்றாலத்தில் முகம்மதுராஜா என்பவருடன் வசித்து வருகிறாா். அவா்களுடன் நிஷாவும் வசித்து வந்தாா்.

நிஷா, திருநெல்வேலியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். அவா் பட்டுக்கோட்டையில் இருக்கும்போது, கவியரசன் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னா் குற்றாலம் வந்த பிறகு, மத்தளம் பாறையைச் சோ்ந்த அஜய் என்பவரை காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

அஜய்க்கு பழைய காதல் தெரிய வரவே அவா்கள் இருவருக்கும் தொலைபேசியில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மனமுடைந்த நிஷா, ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

குற்றாலம் உதவி ஆய்வாளா் மாணிக்க செல்வி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.