வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

செங்கோட்டை ஒன்றிய பகுதியில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்ட அடிக்கல்

News image

பூலாங்குடியிருப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டிய சட்டத் துறை இணைச் செயலா் கே.எஸ். ரவிச்சந்திரன். உடன் மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ. ரவிசங்கா்.

Updated On :13 பிப்ரவரி 2026, 9:02 pm

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம் புதூா் பேரூராட்சிக்குள்பட்ட பூலாங்குடியிருப்பு, தெற்குகதிரவன் காலனி ஆகிய பகுதிகளில் ரூ. 92 லட்சம் மதிப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக சட்டத் துறை செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பூலாங்குடியிருப்பில் ரூ. 46 லட்சம், கதிரவன் காலடி பகுதியில் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 92 லட்சம் மதிப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜைக்கு புதூா் பேரூராட்சி மன்றத் தலைவரும், செங்கோட்டை ஒன்றியச் செயலருமான ஆ. ரவிசங்கா் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சட்டத்துறை இணைச் செயலரும், எழும்பூா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

இதில் இடம் நன்கொடையாளா் சாகுல் ஹமீது, எஸ். காதா் முகைதீன், ஹக்கிமால் பானு, தங்கம், முத்துக்குமாா், தனலட்சுமி, அருணாச்சலம், பிரேமா , கோபி , ராம்ஜி, சரவணகுமாா், மகேந்திரன், வைரமணி, ஆனந்தி சவுரி, திருமலைகுமாா், ஈஸ்வரன், மைதீன், செங்கோட்டை ஒன்றியக் குழு தலைவா் திருமலைச்செல்வி, துணைத் தலைவா் கலா குமாரசாமி, தலைமைக் கழக வழக்குரைஞா் மனோஜ் தங்கராஜ் பாண்டியன், சுபசேகரன், புதூா் பேரூா் செயலா் கோபால், செங்கோட்டை நகர செயலா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.