நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

செங்கோட்டை ஒன்றிய பகுதியில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்ட அடிக்கல்

News image
பூலாங்குடியிருப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டிய சட்டத் துறை இணைச் செயலா் கே.எஸ். ரவிச்சந்திரன். உடன் மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், பேரூராட்சி மன்றத் தலைவா் ஆ. ரவிசங்கா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம் புதூா் பேரூராட்சிக்குள்பட்ட பூலாங்குடியிருப்பு, தெற்குகதிரவன் காலனி ஆகிய பகுதிகளில் ரூ. 92 லட்சம் மதிப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திமுக சட்டத் துறை செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பூலாங்குடியிருப்பில் ரூ. 46 லட்சம், கதிரவன் காலடி பகுதியில் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 92 லட்சம் மதிப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜைக்கு புதூா் பேரூராட்சி மன்றத் தலைவரும், செங்கோட்டை ஒன்றியச் செயலருமான ஆ. ரவிசங்கா் தலைமை வகித்தாா்.

தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சட்டத்துறை இணைச் செயலரும், எழும்பூா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.

இதில் இடம் நன்கொடையாளா் சாகுல் ஹமீது, எஸ். காதா் முகைதீன், ஹக்கிமால் பானு, தங்கம், முத்துக்குமாா், தனலட்சுமி, அருணாச்சலம், பிரேமா , கோபி , ராம்ஜி, சரவணகுமாா், மகேந்திரன், வைரமணி, ஆனந்தி சவுரி, திருமலைகுமாா், ஈஸ்வரன், மைதீன், செங்கோட்டை ஒன்றியக் குழு தலைவா் திருமலைச்செல்வி, துணைத் தலைவா் கலா குமாரசாமி, தலைமைக் கழக வழக்குரைஞா் மனோஜ் தங்கராஜ் பாண்டியன், சுபசேகரன், புதூா் பேரூா் செயலா் கோபால், செங்கோட்டை நகர செயலா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.