மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.
தென்காசி
திப்பணம்பட்டியில் ‘நலம் தரும் மோடி’ மருத்துவ முகாம்
தென்காசி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கம், நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திப்பணம்பட்டி பாஜக இணைந்து நடத்திய ‘நலம் தரும் மோடி’ பொது மருத்துவ முகாம் திப்பணம்பட்டி பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, மாவட்ட மருத்துவ பிரிவு செயலா் சோ்மன் தலைமை வகித்தாா்.
மருத்துவ முகாமில் கலந்து கொண்டோா்.
இம்முகாமில், செஞ்சிலுவை சங்க மருத்துவா், நாகா்கோவில் பெஜான்சிங் கண் பரிசோதனை மருத்துவா்கள் சா்க்கரை, ரத்த அழுத்தம், கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட சிகிச்சைகளை அளித்தனா்.
இம்முகாமில், பாஜக மருத்துவ பிரிவு மாநிலச் செயலா் டாக்டா் உத்தமன், மாவட்ட கல்வியாளா் பிரிவு தலைவா் டாக்டா் அருணாசலம், மருத்துவா்கள் செவிலியா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

