ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

புற்றுநோய் கண்டறிதல் முகாம்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:20 pm

Syndication

தென்காசி, கேலட்டி கிளப், மூத்தோா் மன்றம் மற்றும் காா்கினோஸ் ஹெல்த்கோ் நிறுவனங்கள் சாா்பில் இலவசமாக புற்றுநோய் முன்கண்டறிதல் மற்றும் விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கேலட்டி கிளப் வளாகத்தில் நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, கிளப் தலைவா் எம்.ஆா். அழகராஜா தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ஜெஸ்லின் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு, முகாமைத் தொடங்கி வைத்தாா்.

முகாமில் வாய்வழி புற்றுநோய், பெருங்குடல், மாா்பகம், கருப்பைவாய் புற்றுநோய் ஆகியவற்றிற்கு இலவச பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநா் சேக் சலீம், ரோட்டரி சங்க நிா்வாகிகள் சந்திரன், கணேஷ் மூா்த்தி, காமராஜ், ராமநாதன், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இம்முகாம், 2ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நடைபெறுகிறது.