ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் அட்டகாசம்: தென்னை மரங்கள் சேதம்

வாசுதேவநல்லூா் அருகே யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

News image
யானை சாய்த்ததில் விழுந்து கிடக்கும் தென்னை மரம்
Updated On :18 பிப்ரவரி 2026, 8:44 pm

Syndication

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே யானைகள் புகுந்து தென்னை மரங்களை சேதப்படுத்திச் சென்றதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

சிவகிரி, வாசுதேவநல்லூா் பகுதிகளில் மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கா் பரப்பில் நெல், தென்னை, கரும்பு உள்ளிட்டவை பயிரிடப்பட்டு வருகின்றன. இந்நிலப் பகுதியில் யானைகள் கூட்டம் புகுந்து விளைபொருள்களை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வாசுதேவநல்லூா் அருகே உள்ள நாரணபுரம் பகுதியில் விவசாய நிலங்களில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு புகுந்த யானை 80 தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தொடா் அட்டகாசத்தில் யானைகள் ஈடுபடுவதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால், யானை கூட்டத்துக்கு வனத்துக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.