புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது

News image
கைது
Updated On :22 பிப்ரவரி 2026, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் அருகே ஆட்டோவில் மது பாட்டில்கள் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.

ஆலங்குளம் அருகே புதுப்பட்டி பகுதியில் ஆலங்குளம் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த பயணிகள் ஆட்டோவை சோதனையிட்டனராம். அதில் சட்ட விரோதமாக விற்பனை செய்வதற்கு 300 மதுபாட்டில்கள் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்ததாம்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், ஆட்டோ ஓட்டுநா் அம்பாசமுத்திரம் அருகே பொட்டல் காமராஜா்புரம் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் முருகன் (44) என்பது தெரிய வந்தது. ஆட்டோ, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா், முருகனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.