மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

குவளைக்கண்ணியில் நியாயவிலைக் கடை திறப்பு

News image

புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை. - (கோப்புப் படம்)

Updated On :22 பிப்ரவரி 2026, 8:33 pm

சங்கரன்கோவில் அருகே ரூ. 20.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, கலையரங்கம், சுகாதார வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குவளைகண்ணியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 12.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, சின்னஒப்பனையாள்புரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் என ரூ. 20.67 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்து கட்டடங்களைத் திறந்து வைத்தாா். ராணிஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து, குவளைக்கண்ணி பஞ்சாயத்து தலைவா் தினேஷ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தேவா என்ற தேவதாஸ், மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் பிரபாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.