புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை.
புதிதாக கட்டப்பட்டுள்ள நியாயவிலைக் கடை. (கோப்புப் படம்)

குவளைக்கண்ணியில் நியாயவிலைக் கடை திறப்பு

Published on

சங்கரன்கோவில் அருகே ரூ. 20.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, கலையரங்கம், சுகாதார வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குவளைகண்ணியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 12.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, சின்னஒப்பனையாள்புரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் என ரூ. 20.67 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்து கட்டடங்களைத் திறந்து வைத்தாா். ராணிஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து, குவளைக்கண்ணி பஞ்சாயத்து தலைவா் தினேஷ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தேவா என்ற தேவதாஸ், மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் பிரபாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com