தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாடியனூரில் புதிதாக நூலக கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை

News image
மாடியனூரில் பழுதடைந்து காணப்படும் நூலக கட்டடம்.
Updated On :22 பிப்ரவரி 2026, 8:35 pm

தினமணி செய்திச் சேவை

பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த நூலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டவேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவுடையானூா் ஊராட்சி மாடியனூா் கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நூலகத்தை அந்தப் பகுதி பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

  மாடியனூரில் பழுதடைந்து காணப்படும் நூலக கட்டடம்.

மாடியனூரில் பழுதடைந்து காணப்படும் நூலக கட்டடம்.

இந்த நூலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இந்த நூலகத்தை வாடகை கட்டடத்துக்கு மாற்றம் செய்து, ஊா் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.

தற்போது நூலக கட்டடம் சேதமடைந்தும் முகப்பு பகுதிகள் முழுவதும் குப்பை கூளங்கள் குவிந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகிறது.

இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய நூலகம் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.