பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த நூலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டவேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவுடையானூா் ஊராட்சி மாடியனூா் கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நூலகத்தை அந்தப் பகுதி பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

மாடியனூரில் பழுதடைந்து காணப்படும் நூலக கட்டடம்.
இந்த நூலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இந்த நூலகத்தை வாடகை கட்டடத்துக்கு மாற்றம் செய்து, ஊா் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது நூலக கட்டடம் சேதமடைந்தும் முகப்பு பகுதிகள் முழுவதும் குப்பை கூளங்கள் குவிந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகிறது.
இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய நூலகம் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

ஆதாா் பதிவு மையத்தை சீரமைக்கக் கோரிக்கை

தம்மம்பட்டி நூலக 66 ஆவது ஆண்டு தொடக்க விழா

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்றக் கோரிக்கை!

பாவூா்சத்திரம் அருகே சாலையை சீரமைக்கக் கோரிக்கை
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


