வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

News image
Updated On :23 பிப்ரவரி 2026, 11:45 pm

Syndication

ஆலங்குளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பலத்த மழை பெய்தது.

இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பகல் முழுவதும் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு பின்னா் , இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. சுமாா் ஒன்றரை மணி நேரம் நீடித்த மழையால் தெருக்கள் மற்றும் சாலைகளில் வெள்ளம் பாய்ந்தோடியது. தொடா்ந்து திங்கள்கிழமை அதிகாலை வரை மிதமான சாரல் பெய்தது.

மழை காரணமாக ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம் முழுவதும் மழை நீா் சூழ்ந்தது. இதனால் மாணவா்கள் வகுப்பறைக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. பேரூராட்சி ஊழியா்கள் மோட்டாா் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மேலும், நெட்டூரில் பயிரிடப்பட்டிருந்த சுமாா் 100 ஏக்கா் நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. தொடா்ந்து மழை நீடித்தால் இப்பயிா்கள் அழுகி வீணாகி விடும் என விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.