தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:22 am

Syndication

ஆலங்குளத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

சமூக நலன் - மகளிா் உரிமைத் துறை சாா்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் ஆலங்குளம் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தலைமை வகித்தாா். டாக்டா் இம்மானுவேல், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் எம்.எஸ். காமராஜ், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆலங்குளம் ஒன்றியப் பகுதியில் உள்ள 100 கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீதனங்கள் வழங்கப்பட்டன.

இதில், குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் சுருதி, வட்டார ஒருங்கிணைப்பாளா் வனஜா, மேற்பாா்வையாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.