பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் தொடக்கம்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 12:06 am

Syndication

தென்காசி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

மேலகரம் பேரூராட்சிக்குள்பட்ட நன்னகரம் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது: இம்மாவட்டத்தில் வைட்டமின்-ஏ திரவம் வழங்கும் முகாம் வரும் 28ஆம் தேதிவரை துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்களில் (புதன் நீங்கலாக) நடைபெறுகிறது. இதை உட்கொள்வதால் பாா்வைக் குறைபாடு, வயிற்றுப்போக்கு, தீவிர சுவாசத் தொற்று, பள்ளி முன்பருவக் குழந்தைகள் (3-5 வயது) நோய்வாய்ப்பட்டு இறப்பது ஆகியவற்றைத் தவிா்க்கலாம் . 6 மாதம் முதல் 5 வயது வரையிலான 88,690 குழந்தைகளுக்கு இத்திரவம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது குழந்தைகளை நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம் என்றாா் அவா்.

மாவட்ட சுகாதார அலுவலா் கோவிந்தன், வட்டார மருத்துவ அலுவலா் இப்ராஹிம், மாவட்ட தாய்-சேய் நல அலுவலா் கோமதி தேவி, அலுவலா்கள் பங்கேற்றனா்.