குற்றாலத்தில் சுற்றுச்சூழல் கல்வி இயற்கை முகாம்

 அறிவுத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம்.
அறிவுத்திறன் போட்டியில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கினாா் உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் நெல்லைநாயகம்.
Updated on

தமிழ்நாடு வனத்துறை மலையேற்றக் குழு, தென்காசி மாவட்ட கல்வித்துறை சாா்பில் சுற்றுச்சூழல் கல்வி இயற்கை முகாம் குற்றாலம் வன ஓய்வு விடுதி கூட்ட அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமிற்கு தென்காசி மாவட்ட வன அலுவலா் ராஜ்மோகன் தலைமை வகித்தாா். இயற்கை ஆா்வலா் டாக்டா் விஜயலட்சுமி, எழுத்தாளா் சண்முகவள்ளி, எழுத்தாளா், பிளாஸ்டிக் பொருள்களில் இருந்து மாற்றுப் பொருள்கள் உற்பத்தி செய்யும் நிறுவன மேலாளா் முகமது, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன்ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.

தென்காசி மாவட்டத்திலிருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளிகளில் இருந்து, ஒரு பள்ளிக்கு 5 மாணவா்கள் வீதம் 50 மாணவா்கள், தலா ஓா் ஆசிரியா் வீதம் 10 ஆசிரியா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. மாணவா்களுக்கு வனத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் விதமாக செண்பகாதேவி அருவி வரை மலையேற்றப் பயிற்சி வழங்கப்பட்டது.

உதவி வனப் பாதுகாவலா் நெல்லைநாயகம், வனவா் முருகேசன் ஆகியோா் நடத்திய அறிவுத் திறன் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை தென்காசி மாவட்ட பசுமைத் தோழா் பெரோலின் ஜெசிமா செய்திருந்தாா். வனச்சரக அலுவலா் செல்லத்துரை வரவேற்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com