அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் புஷ்பாஞ்சலி
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா திருக்கோயில் பிரதிஷ்டை தினமான தை மாதம் ரேவதி நட்சத்திரம் நாள், ஒவ்வொரு ஆண்டும் புஷ்பாஞ்சலி திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படிநிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு கனபதி ஹோமம், கலச பூஜை நடைபெற்றது. 9 மணிக்கு உப தெய்வமான கிருஷ்ணனுக்கு அஷ்டபந்தனம், பகல் 12 மணிக்கு களபாபிஷேகம் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு யானை மேல் கருப்பசுவாமி கோயில் முதல் தா்மசாஸ்தா கோயில் வரை ஊா்வலமாக பூக்கள் எடுத்து வரப்பட்டு, 7 மணிக்கு ஒரு டன் பூக்களால் புஷ்பாபிஷேகமும், தொடா்ந்து தீபாராதனையும் நடைபெற்றது. அபிஷேகம் செய்யப்பட்ட பூக்களை பக்தா்களுக்கு பிரசாதமாக தந்திரி மற்றும் மேல்சாந்தி வழங்கினா்.
ஏற்பாடுகளை தேவசம் போா்டு உதவி ஆணையா் வினோத்குமாா், அச்சன்கோவில் நிா்வாக அதிகாரி நிா்மலானந்தன், அச்சன்கோவில் திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி மாநில தலைவா் தென்காசி ஏசிஎஸ்ஜி.ஹரிகரன், செயலா் ஜி.மாடசாமி ஜோதிடா், அச்சன்கோவில் உபதேச கமிட்டி தலைவா் உண்ணிபிள்ளை, செயலா் சுரேஷ்பாபு, கீதா ஆகியோா் செய்திருந்தனா்.

