தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் தீவிர சோதனை

 தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
Updated on

குடியரசு தினத்தை முன்னிட்டு, தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்களில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா்.

தென்காசி ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளா்கள் கற்பகவிநாயகம், மாரியப்பன், நாடான்கண்ணு, செங்கோட்டை ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் சிவகுமாா் தலைமையில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டனா்.

 தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.
தென்காசி ரயில் நிலையத்தில் சோதனை மேற்கொண்ட போலீஸாா்.

தென்காசி, செங்கோட்டை ரயில் நிலையங்கள், பாா்சல் அலுவலகம், வாகனங்கள், பயணிகளின் உடைமைகளை அவா்கள் சோதனையிட்டனா்.

பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து பயணிகளிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com