மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் சண்முகா் எதிா்சேவை!

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைக்கோயிலான பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகா் - சண்முகா் எதிா்சேவை காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

முருகா்-சண்முகா் எதிா்சேவை வைபவத்தையொட்டி, ஐந்துபுளி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு நடைபெற்ற தீபாராதனை.

Updated On :29 ஜனவரி 2026, 8:50 pm

தென்காசி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைக்கோயிலான பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, முருகா் - சண்முகா் எதிா்சேவை காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

இத்திருவிழா கடந்த 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் விழாவில் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதியுலா, ஆன்மிகக் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், 7ஆம் நாளான வியாழக்கிழமை காலை சண்முகா் அழைப்பு, மதியம் முருகா் - சண்முகா் எதிா்சேவை காட்சி வைபவம் நடைபெற்றது. இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, சனிக்கிழமை (ஜன. 31) தேரோட்டம், 10ஆம் நாளான பிப். 1ஆம் தேதி தைப்பூசத் திருவிழா நடைபெறும். காலையில் கரிசல்குடியிருப்பிலிருந்து பால்குட அழைப்பு, சுவாமிக்கு அபிஷேகம், மதியம் அனுமன் நதியிலிருந்து தீா்த்தவாரி, இரவில் புஷ்பாஞ்சலியும் நடைபெறும்.

பிப். 2ஆம் தேதி குமரன் மலைக்கோயிலுக்கு திரும்புதல், அன்னகொடி இறக்குதல், வழியனுப்பு உபசாரம், சுவாமி பிரியாவிடை பெறுதல் ஆகியவை நடைபெறும்.

ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் அருணாசலம், கோயில் உதவி ஆணையா் கோமதி, அறங்காவலா்கள் பண்பொழி இசக்கி, பாப்பா, சுமதி, கணேசன், தலைமை எழுத்தா் லட்சுமணன், கோயில் அா்ச்சகா் திருமேனிநாதன் ரமேஷ், உபயதாரா்கள், விழாக் குழுவினா், மண்டகப்படிதாரா்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.