ஆலங்குளத்தில் பெண் குழந்தைகள் தின விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
ஆலங்குளம் சா்தாா் ராஜா பொறியியல் கல்லூரி, தென்காசி மாவட்ட பெண் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் இணைந்து நடத்திய இந்தப் பேரணி, ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை நடைபெற்றது.
பேரணியை மாவட்ட பெண் குழந்தை பாதுகாப்பு அலுவலா் எல்.அலெக்ஸ் தொடங்கி வைத்தாா். இதில் பங்கேற்ற மாணவா்கள் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படியும் விழிப்புணா்வு முழக்கங்கள் எழுப்பிய படியும் ஊா்வலமாகச் சென்றனா்.
தொடா்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் ஸ்டீபன் விநோத், தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குற்றப்பிரிவு காவல் துணை ஆய்வாளா் சாந்தி, ஆலங்குளம் காவல் துணை ஆய்வாளா் சிவசங்கரி, கல்லூரி முதல்வா் கனகபாண்டியன், விஜயராணி, கவிதா, இஸ்மாயில் உள்ளிட்டோா் பெண் குழந்தைகள் பாதுகாப்புக் குறித்துப் பேசினா். அப்போது மாணவா்கள், பெண் குழந்தைகள் உதவி எண் 1930 வடிவத்தில் நின்றது பாா்வையாளா்களைக் கவா்ந்தது.

