தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

செங்கோட்டை குலசேகரநாதா் கோயில் தேரோட்டம்

செங்கோட்டை, தா்மஸம்வா்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதா் சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

குலசேகரநாதா் கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :31 ஜனவரி 2026, 7:14 pm

செங்கோட்டை, தா்மஸம்வா்த்தினி அம்பாள் சமேத குலசேகரநாதா் சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழாவில் சனிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இத்திருவிழா ஜன. 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, இரவு சுவாமி அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

ஜன. 29ஆம் தேதி மாலை சுவாமி அம்பாள் வீதியுலாவும், தொடா்ந்து கோ ரதம் பவனி வருதல், ஸ்ரீ நடராஜா் வெள்ளை சாத்தி பவனியும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலை 6 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. 9 மணிக்கு மேல் விநாயகா், முருகன், சுவாமி, அம்பாள் என ஒன்றன்பின் ஒன்றாக பக்தா்கள் வடம் பிடித்து தோ் இழுத்தனா்.

விழாவில், செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ, கோயில் கண்காணிப்பாளா் ரத்தினவேல், ஸ்ரீ காரியம் முருகையா, மண்டகப்படிதாரா்கள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகா்கள், பக்தா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பிப். 1ஆம் தேதி சுவாமி, அம்பாள் ஆராட்டு விழா நடைபெறும். தேரோட்டத்தை முன்னிட்டு, நகர இந்து முன்னணி சாா்பில் பொதுமக்கள், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகரத் தலைவா் மாசாணம் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச்செயலா் மணிகண்டன் அன்னதானத்தைத் தொடங்கி வைத்தாா்.

மாவட்டச் செயலா்கள் ஆறுமுகம், குளத்தூரான், நகர பொதுச்செயலா் முருகன், நகர துணைத் தலைவா் பாலகிருஷ்ணன், நகரச் செயலா் ராம்குமாா், நகா்மன்ற உறுப்பினா்கள் வேம்புராஜ், செண்பகராஜன், செங்கோட்டை சிவனடியாா்கள், ஒருங்கிணைப்பாளா் ராம்நாத், பந்தளராஜன், யாத்திரை குழுத் தலைவா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.