தென்காசி மேலப்பாட்டாகுறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.
தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழாப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:
மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடம் பெறுபவா்களுக்கு முறையே ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 10,08,000 வழங்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவா் என்றாா் அவா்.
ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். ராஜேஷ், மண்டல முதுநிலை அலுவலா் சிவக்குமாா், உடற்கல்வி அலுவலா் நம்பிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தென்காசியில் ஆலோசனைக் கூட்டம்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு 60 மாணவியா் கல்வி சுற்றுலா

குற்றாலம் கல்லூரியில் கனவுகள் மெய்ப்படும் விழா
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


