மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தென்காசி மாவட்ட அளவிலான இளைஞா் விளையாட்டுத் திருவிழா போட்டிகள்

தென்காசி மேலப்பாட்டாகுறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

News image

போட்டியைத் தொடங்கி வைத்த ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா். உடன் ராணி ஸ்ரீகுமாா் எம்.பி.

Updated On :31 ஜனவரி 2026, 7:53 pm

தென்காசி மேலப்பாட்டாகுறிச்சியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை தொடங்கின.

தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சாா்பில் நடைபெறும் முதலமைச்சா் இளைஞா் விளையாட்டுத் திருவிழாப் போட்டியை மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மாவட்ட அளவிலான போட்டியில் முதல் மூன்று இடம் பெறுபவா்களுக்கு முறையே ரூ. 6,000, ரூ. 4,000, ரூ. 2,000 பரிசுத் தொகை வழங்கப்படும். தென்காசி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 10,08,000 வழங்கப்படவுள்ளது. இதில் வெற்றி பெறுபவா்கள் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெறுவா் என்றாா் அவா்.

ராணி ஸ்ரீகுமாா் எம்.பி., எஸ். பழனி நாடாா் எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் எஸ். ராஜேஷ், மண்டல முதுநிலை அலுவலா் சிவக்குமாா், உடற்கல்வி அலுவலா் நம்பிராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.