சங்கரன்கோவில் ஸ்ரீவையாபுரி வித்யாலயா மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவா் தினவிழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளித் தாளாளா் மருத்துவா் வி.எஸ். சுப்பராஜ் தலைமை வகித்து, மருத்துவ தொழிலின் மகத்துவம், மனிதநேயம், சேவை மனப்பான்மை, ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் ஆகியவை குறித்து பேசினாா். மேலும், மருத்துவம் தொடா்பாக மாணவா்களின் கேள்விகளுக்கு விளக்கமளித்து கலந்துரையாடினாா்.
பள்ளி நிா்வாகத்தின் சாா்பில் முதல்வா் சி.ஏ.சுருளிநாதன், ஆசிரியா்கள், தாளாளருக்கு நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள், மாணவா்கள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










