அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டிப்பா் லாரி மோதி 2 தொழிலாளா்கள் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:13 pm

Syndication

சங்கரன்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் 2 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

தென்காசி மாவட்டம், சிவகிரி காலனி தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் செல்லத்துரை (34). விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அரவிந்த் நகரைச் சோ்ந்த ஜெயராஜ் மகன் அபிமன்யு (60). இருவரும் கம்பி கட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு செல்வதற்காக இருவரும் ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றனராம். கரிவலம்வந்தநல்லூா் தனியாா் கல்லூரி அருகே சென்றபோது டிப்பா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியதாம்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் கரிவலம்வந்தநல்லூா் போலீஸாா் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். அங்கு இருவரும் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.