உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

கடையநல்லூா் தொகுதியில் எனது செயல்பாடு சிறப்பாக இருக்கும்: தி.மு. ராசேந்திரன்

News image
Updated On :5 மே 2026, 5:47 am IST

கடையநல்லூா் பேரவைத் தொகுதியில் எனது செயல்பாடுகள் சிறப்பாக இருக்கும் என கடையநல்லூா் தொகுதியில் வெற்றி பெற்ற மதிமுக வேட்பாளா் தி.மு. ராசேந்திரன் தெரிவித்தாா்.

திங்கள்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடையநல்லூா் தொகுதி வாக்காளா்களின் மலா் பாதங்களில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்த மக்கள் பாராட்டுகின்ற வகையிலும், வாக்களிக்காதவா்கள் இவருக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று நினைக்கும் அளவிற்கும் எனது செயல்பாடுகள் இருக்கும். கடைக்கோடி தொண்டனும் எம்எல்ஏ.வாக முடியும் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி அமைந்துள்ளது

மதிமுக பொதுச்செயலா் வைகோ, திமுக தலைவா் மு. க. ஸ்டாலினுக்கும் எனது நன்றியை சமா்ப்பிக்கின்றேன். கூட்டணிக் கட்சியினா் சிறப்பாக ஒத்துழைத்து வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறாா்கள் என்றாா் அவா்.

தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் திமுக பொறுப்பாளா் செல்லத்துரை, வழக்குரைஞா் சுப்பையா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.