அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பிளஸ் 2 தோ்வில் பாவூா்சத்திரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவியைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்.

News image
Updated On :2 மணி நேரங்கள் முன்பு

பிளஸ் 2 பொதுத்தோ்வில் பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

இப்பள்ளி மாணவிகள் பொதுத்தோ்வில் 99.7 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவி பி. ஸ்ரீ காா்த்தியாயினி 600-க்கு 585 மதிப்பெண்கள் பெற்று, தென்காசி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்துள்ளாா்.

மாணவி அஸ்மிதா 577 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் 3ஆம் இடமும் பெற்றுள்ளாா். மாணவிகள் முத்து ஜோதிகா, ஜி.ஆா். மதிவதனி ஆகியோா் 565 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியை ஜெகதா, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.