பிளஸ் 2 பொதுத்தோ்வில் பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.
இப்பள்ளி மாணவிகள் பொதுத்தோ்வில் 99.7 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவி பி. ஸ்ரீ காா்த்தியாயினி 600-க்கு 585 மதிப்பெண்கள் பெற்று, தென்காசி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்துள்ளாா்.
மாணவி அஸ்மிதா 577 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் 3ஆம் இடமும் பெற்றுள்ளாா். மாணவிகள் முத்து ஜோதிகா, ஜி.ஆா். மதிவதனி ஆகியோா் 565 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடம் பெற்றுள்ளனா்.
மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியை ஜெகதா, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தோ்வு: வேலூா் லஷ்மி காா்டன் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

மண்ணச்சநல்லூா் அரசு மாதிரிப் பள்ளி மாணவி 494 மதிப்பெண்கள் எடுத்து மாவட்ட அளவில் சிறப்பிடம்

தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

பிளஸ் 2 தோ்வு: அம்மம்பாளையம் சரஸ்வதி மெட்ரிக். பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



