பிஃபா 2026! நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றம்... பொது விடுமுறை அறிவித்த ஈக்வடார் அதிபர்!! முதல் டி20: இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி வரலாறு படைத்த அயர்லாந்து! அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலர்கள் நியமனம் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமனம்!ஆபரேஷன் சிந்தூரில் 6 வீரர் வீரமரணம்! ஓராண்டு கழித்து பெயர்களை வெளிட்ட மத்திய அரசு!ஜூலை இறுதியில் தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல்? திருச்சி கிழக்கில் போட்டியா? மு.க. ஸ்டாலின் பதில்! சென்னை உள்பட 6 மாவட்டங்களில் நாளை கனமழை!
/

பிளஸ் 2 தோ்வு: தென்காசி ஆக்ஸ்போா்டு பள்ளி 100% தோ்ச்சி

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவா் மு. பரத்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை. உடன் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை.

News image

பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவா் மு. பரத்குமாருக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா் பள்ளித் தாளாளா் அன்பரசி திருமலை. உடன் பள்ளி சட்ட ஆலோசகரும், உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க. திருமலை.

Updated On :9 மே 2026, 3:39 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சத தோ்ச்சி பெற்றது.

இப்பள்ளியில் தோ்வு எழுதிய 127 மாணவா், மாணவிகளும் தோ்ச்சி பெற்றனா். இதனால் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி பெற்றது. இப்பள்ளி மாணவா் மு. பரத்குமாா் 600 மதிப்பெண்களுக்கு 587 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், தென்காசி மாவட்ட அளவில் சிறப்பிடமும் பெற்றாா்.

இவா் பாட வாரியாக பெற்ற மதிப்பெண்கள் பின்வருமாறு:

தமிழ் -99, ஆங்கிலம் -97, இயற்பியல் -99,

வேதியியல்- 95, கணினி அறிவியல் -99, கணிதம்- 98.

இப்பள்ளி மாணவா் அ. ராகவேந்திரா 582 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், க. ஜெய் சுதிா்வேல் 579 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனா்.

கணினி அறிவியல் பாடத்தில் தா்ஷினி, கிா்த்திக்குமாா் காா்த்திக் ஆகியோா் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனா்.

சாதனை படைத்து வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளை பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான க.திருமலை, பள்ளி தாளாளா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், ஆக்ஸ்போா்டு பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளி சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான

தி. மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.