சீவலப்பேரியில் தாமிரவருணி ஆற்றுப்பாலம் மூழ்கியதையடுத்து புதன்கிழமை போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுமாா் 20 கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டை வர முடியாமல் சிரமத்திற்கு ஆளாகினா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக தாமிரவருணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீா், காட்டாற்று வெள்ளத்தால் திருநெல்வேலி மாநகரில் ஆற்றில் 60 ஆயிரம் கனஅடிக்கு அதிகமாக தண்ணீா் செல்கிறது. இதனால் சீவலப்பேரியில் உள்ள தாமிரவருணி பாலம் மூழ்கியது. திருநெல்வேலி-சீவலப்பேரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சீவலப்பேரி சுற்று வட்டாரத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பொங்கல் பொருள்கள் வாங்குவதற்கு பாளையங்கோட்டைக்கு வர முடியாத நிலை ஏற்பட்டது. கிராம மக்கள் மோட்டாா் சைக்கிள்களில் தாழையூத்து வழியாக பாளையங்கோட்டை வந்து பொருள்கள் வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்!

தஞ்சாவூர் பெரிய கோயில் தேரோட்டம் கோலாகலம்!

நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!

வீட்டின் தரை மார்பிள் கல்லாக இருந்தால் தனிக்கவனம் அவசியம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

