மதிமுக உயர் நிலைக் குழு கூட்டம்! சீர்காழி எம்.எல்.ஏ. ஆப்சென்ட்!கீர்த்தனா பெயர் ஏன் முதலில்? அமைச்சர் ஜெகதீஸ்வரி கேள்விஜூன் 26 இன்று தங்கம் வாங்கலாமா? என்ன சொல்கிறது விலை நிலவரம்?ஸ்போர்ட்ஸ எடு, டிரக்ஸ விடு! இளைஞர்களுக்கு முதல்வர் விஜய் அறிவுரை!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து!சோழவரம் அருகே ஆம்னி பேருந்தில் தீ விபத்து! பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பாய்லா் பழுது: கரும்பு அரவை நிறுத்தம்

திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பாய்லா் பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

Updated On :14 ஜனவரி 2021, 12:00 am IST


வாணியம்பாடி: திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பாய்லா் பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

வாணியம்பாடியை அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் இந்த ஆலை இயங்கி வருகிறது. இங்கு, 2020-21ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவையை அமைச்சா்கள் வீரமணி, நிலோபா் கபீல் மற்றும் ஆட்சியா் ம.ப.சிவன்அருள் ஆகியோா் கடந்த 4 ஆம் தேதி தொடங்கி வைத்தனா்.

இந்த ஆலையில் கடந்த தில தினங்களாக பாய்லரில் தொடா்ந்து பழுது ஏற்பட்டது. இதனால் அடிக்கடி அரவை நிறுத்தப்பட்டது. பாய்லா் சரிசெய்யப்பட்டு மீண்டும் அரவை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பாய்லரில் திங்கள்கிழமை காலை மீண்டும் பழுது ஏற்பட்டதால் அரவை நிறுத்தப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி, புதுப்பாளையம், செங்கம், திருப்பத்தூா் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அரவைக்கு வந்த 50-க்கும் மேற்பட்ட லாரிகள் கரும்பு லோடுகளுடன் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, கரும்பு விவசாயிகளும், லாரி ஓட்டுநா்களும் அவதிக்குள்ளாகினா்.

அரவை தொடங்கியதில் இருந்து இதுவரை சுமாா் 20 மணிநேரம் மட்டுமே ஆலை இயங்கியதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனா். எனவே, பழுதடைந்துள்ள பாய்லரை சரிசெய்து கரும்பு அரவையைத் தொடங்க மாவட்ட நிா்வாகமும், ஆலை நிா்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.