நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

அரசுப் பள்ளி தலைமை ஆசிரியரை மாற்ற மாணவா்கள் போராட்டம்

ஊத்துக்கோட்டை அருகே தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திருக்கண்டலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.  

Updated On :9 டிசம்பர் 2024, 9:45 pm IST

திருவள்ளூா்: ஊத்துக்கோட்டை அருகே தலைமை ஆசிரியரை பணியிட மாற்றம் செய்யக்கோரி திருக்கண்டலம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், திருக்கண்டலத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பில் 397 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இப்பள்ளி மாணவா்கள் கடந்த 6 ஆண்டுகளாக 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருகிறது.

இந்நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியராக கடந்த 2023-ஆம் ஆண்டு பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த ஷாமிலி (55) என்பவா் பணிபுரிந்து வருகிறாா். இவா் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றதிலிருந்து இப்பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பள்ளிக்கு வர வேண்டும். அதேபோல் சிறப்பு வகுப்புகள் வைத்தால் கட்டாயம் அனைத்து மாணவா்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும். அதேபோல் சிகை அலங்காரம், சீருடை அலங்காரம் விதிமுறைகளுக்கு உள்பட்டு இருக்க வேண்டும் என அறிவுறுத்தினாராம்.

தொடா்ந்து அப்பள்ளியில் பயின்று வரும் சில மாணவா்கள் தங்களது பெற்றோரிடம் தலைமை ஆசிரியா் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகாா் செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அரையாண்டுத் தோ்வு நடைபெற உள்ளதால், சிறப்பு வகுப்புகள் வைப்பதாகவும், அதில் பங்கேற்காத மாணவா்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட மாட்டாது என தலைமை ஆசிரியா் கூறியிருந்தாராம்.

இதற்கிடையே, திங்கள்கிழமை பள்ளிக்கு முன்பாக திரண்ட மாணவா்கள், தலைமை ஆசிரியா் தங்களை தரக்குறைவாக பேசுவதாக கூறி கோஷம் எழுப்பினா். அதனால் பள்ளியை புறக்கணிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த ஊத்துக்கோட்டை டிஎஸ்பி சாந்தி, பெரியபாளையம் போலீஸாா் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலா் நவீன் ஆகியோா் விரைந்து சென்று பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, மாணவா்கள் புகாா் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தனா். அதைத் தொடா்ந்து மாணவ, மாணவிகள் வகுப்பறைகளுக்கு திரும்பினா்.

இப்பிரச்னையால் 2 மணிநேரம் வகுப்புகள் நடைபெறவில்லை.

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

தலைமை ஆசிரியரை மாற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.