புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மூச்சுத் திணறலால் சிறுமி உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் தேநீரில் பிஸ்கெட் தொட்டு சாப்பிட்ட 3 வயது சிறுமி மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.

News image
Updated On :25 நவம்பர் 2024, 4:38 pm

Din

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த குருவராஜகண்டிகையில் தேநீரில் பிஸ்கெட் தொட்டு சாப்பிட்ட 3 வயது சிறுமி மூச்சுத் திணறலால் உயிரிழந்தாா்.

ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணா-அமுலு தம்பதியா். இவா்கள் 3 வயது குழந்தை வெங்கடலட்சுமியுடன் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டை அருகே குருவராஜகண்டிகை கிராமத்தில் பிரம்பு கூடை பின்னும் தொழில் செய்தனா்.

இந்நிலையில், மூன்று வயது குழந்தை வெங்கடலட்சுமி, தேநீரில் பிஸ்கெட்டை தொட்டு சாப்பிட்டபோது, குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொடா்ந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தாா். இதுகுறித்து கவரைப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.