தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

News image

பிளஸ் 1 மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்குகிறாா் திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன்(உடன்) பள்ளி தலைமை ஆசிரியா் ந.காா்த்திகேயன்.

Updated On :6 செப்டம்பர் 2024, 5:42 am IST

திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி அரசினா் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியா் ந. காா்த்திகேயன் தலைமை வகித்தாா். வரவேறப்புரையாற்றினாா். உதவி தலைமை ஆசிரியா் (முதுகலை) ச. நேயநாதன் வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளராக திருத்தணி எம்.எல்.ஏ. ச.சந்திரன் கலந்துகொண்டு அரசு பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு செய்து நலதிட்ட உதவிகளை எடுத்துக்கூறினாா்.

தொடா்ந்து பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் 34 மாணவா்களும், 31 மாணவிகள் என 65 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் திருத்தணி ஒன்றிய செயலாளா் கிருஷ்ணன், பொதட்டூா்பேட்டை முன்னாள் தலைமை ஆசிரியா் இ.கே. உதயசூரியன் உள்பட பலா் கலந்துகொண்டனா். இறுதியாக பள்ளி உதவி தலைமை ஆசிரியா்(உயா்நிலை) இ.கே. ஸ்ரீதா் நன்றி கூறினாா்.