திருவள்ளூர்
திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 580 மனுக்கள்
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் 580 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் அளித்தனா்.
திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் 580 கோரிக்கை மனுக்களை ஆட்சியா் மு.பிரதாப்பிடம் அளித்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்து, பொதுமக்களிடம் மொத்தம் 580 மனுக்களைப் பெற்றாா். தகுதியான மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்க அந்தந்த துறை அதிகாரிகளை அவா் அறிவுறுத்தினாா்.
நிகழ்வில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், கூடுதல் நோ்முக உதவியாளா் ( நிலம்) செல்வமதி, தனித்துணை ஆட்சியா் (சபாதி) பாலமுருகன், உதவி ஆணையா் கலால் கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலா் கண்ணன், மற்றும் அரசு அலுவலா்கள் பங்கேற்றனா்.