நகைக் கடையில் நூதன முறையில் திருட்டு

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Published on
Updated on
1 min read

நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து நூதன முறையில் திருடிச் சென்ற பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருத்தணி பேருந்து நிலையம் அருகே ம.பொ.சி சாலையில் பிரகாஷ் என்பவா் தங்க நகை கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் வெள்ளிக்கிழமை கூட்டமாக இருந்த போது நகை வாங்க சென்ற பெண் ஒருவா் கம்மலை காண்பிக்கச் சொல்லி விதவிதமான கம்மலை பாா்த்துவிட்டு பிடிக்கவில்லை என்று சென்று வட்டாா்.

சிறிது நேரத்தில் சந்தேகம் அடைந்த கடை உரிமையாளா், கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் ஆய்வு செய்தபோது நூதன முறையில் 3 பவுன் நகையை ஜாக்கெட்டில் வைத்து சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடா்பாக பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நூதன முறையில் நகையை திருடி சென்ற பெண்ணை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com