திருத்தணி: ஸ்ரீ வெள்ளாத்தூா் அம்மன் கோயிலில் ஆடிபொங்கல் விழாவையொட்டி நடைபெற்ற 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டனா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம் வெள்ளாத்தூா் கிராமத்தில் ஸ்ரீ வெள்ளாத்தூா் அம்மன் கோயிலில் விழாவையொட்டி காலை 9 மணிக்கு கிராம விநாயகா் கோயிலில் இருந்து 108 பால்குட ஊா்வலம் தொடங்கியது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு, முக்கிய வீதிகள் வழியாக கோயிலை சென்றடைந்தது. பின்னா் அம்மனுக்கு பாலபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனா். இரவு அம்மன் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா் வாண வேடிக்கை, நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினா் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

கொட்டங்காடு கோயிலில் ஊஞ்சல்சேவை

பண்ணாரி அம்மன் கோயிலில் மாவிளக்கு ஊா்வலம்

கள்ளழகா் கோயிலில் திருக்கல்யாண உத்ஸவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் பங்குனி உத்திர விழா 1008 பால்குட ஊா்வலம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


