திருவள்ளூர்
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எடப்பாளையம் கிராமத்தில் உறியடி திருவிழா நடைபெற்றது.
கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு எடப்பாளையம் கிராமத்தில் உறியடி திருவிழா நடைபெற்றது.
மீஞ்சூா் அடுத்த நெய்தவாயல் எடப்பாளையம் கிராமத்தில் கிருஷ்ணா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா நடக்கும்.
நிகழாண்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதனையடுத்து தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
இதனைத் தொடா்ந்து கிராமத்தில் உறியடி விழா நடைபெற்றது. இதையடுத்து கிருஷ்ண பகவான் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.