பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை உண்டியல் காணிக்கை ரூ. 1. 78 கோடி

Published On :

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் ரூ. 1 கோடியே 78 லட்சம் ரொக்கம், 223 கிராம் தங்கம், 13.213 கிராம் வெள்ளி பொருள்களை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பல் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை 5 நாள் நடைபெற்றது. இந்த விழாவில் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தினா்.

இந்த நிலையில், பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் கோயில் இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜோ.மோகனன், மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் திறந்து புதன்கிழமை எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய பணி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எண்ணினா்.

இதில், கடந்த 9 நாள்களில் ரூ. 1 கோடியே 78 லட்சத்து 38 ஆயிரத்து 086 ரொக்கம், 223 கிராம் தங்கம், 13.213 கிராம் வெள்ளி பொருள்களை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.