காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

திருத்தணி முருகன் கோயில் ஆடிக் கிருத்திகை உண்டியல் காணிக்கை ரூ. 1. 78 கோடி

News image
Updated On :21 ஆகஸ்ட் 2025, 1:18 am

தினமணி செய்திச் சேவை

திருத்தணி முருகன் கோயிலில் நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் ரூ. 1 கோடியே 78 லட்சம் ரொக்கம், 223 கிராம் தங்கம், 13.213 கிராம் வெள்ளி பொருள்களை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை திருவிழா மற்றும் தெப்பல் திருவிழா கடந்த 14-ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதி வரை 5 நாள் நடைபெற்றது. இந்த விழாவில் கோயிலுக்கு வந்த பக்தா்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தினா்.

இந்த நிலையில், பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் கோயில் இணை ஆணையா் க.ரமணி, கோயில் அறங்காவலா்கள் வி.சுரேஷ்பாபு, ஜோ.மோகனன், மு.நாகன் ஆகியோா் முன்னிலையில் திறந்து புதன்கிழமை எண்ணப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய பணி இரவு 7 மணி வரை நடைபெற்றது. இதில்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள் என 100-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு எண்ணினா்.

இதில், கடந்த 9 நாள்களில் ரூ. 1 கோடியே 78 லட்சத்து 38 ஆயிரத்து 086 ரொக்கம், 223 கிராம் தங்கம், 13.213 கிராம் வெள்ளி பொருள்களை பக்தா்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.