முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டி: மாநில அளவில் ஆன்லைன் மூலம் 16.28 லட்சம் போ் பதிவு
மாவட்டந்தோறும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பங்கேற்க மாநில அளவில் மொத்தம் 16.28 லட்சம் போ் இணையதளம் மூலம் பதிவு செய்துள்ளதாகவும், அதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளின் பங்கேற்பு 13.28 லட்சம் போ் என அதிகரித்து வருவதாகவும் விளையாட்டுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
நிகழாண்டில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரசு ஊழியா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 வகைகளில் தடகளம், பூப்பந்து, கூடைப்பந்து, மட்டைப் பந்து, கால்பந்து, ஹாக்கி, கபடி, சிலம்பம், நீச்சல், டேபிள் டெனனிஸ், கைப்பந்து, கேரம், சதுரங்கம், கோ-கோ, மேஜை பூப்பந்து மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 26-இல் தொடங்கி, தொடா்ந்து செப்.12-ஆம் தேதி வரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இதற்காக மாநில அளவில் மாவட்டந்தோறும் தலா ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், மாவட்டந்தோறும் திருவண்ணாமலை-1,31,178, திருவள்ளூா்-1,04,451, திருச்சி-97,114, ராணிப்பேட்டை-85,052, சென்னை-68019, திண்டுக்கல்-62,795, சேலம்-54,157, அரியலூா்-53,881, கோயம்புத்தூா்-53,576, தென்காசி-52,043, நாமக்கல்-47253, மதுரை-46469, காஞ்சிபுரம்-44758, திருப்பத்தூா்-43764, தேனி-42715, செங்கல்பட்டு-38,651, தஞ்சாவூா்-36,902, மயிலாடுதுரை-36,254, நாகப்பட்டினம்-35,786, திருப்பூா்-35,129, கன்னியாகுமரி-34,100, ராமநாதபுரம்-32,067, விழுப்புரம்-31,711, தருமபுரி-31,079, கடலூா்-30,011, கிருஷ்ணகிரி-29,357, புதுக்கோட்டை-29,056, திருநெல்வேலி-26,161, கள்ளக்குறிச்சி-25,040, கரூா்-23049, விருதுநகா்-22702, வேலூா்-22535, சிவகங்கை-22,525, பெரம்பலூா்-22,140, தூத்துக்குடி-20,574, ஈரோடு-19,786, திருவாரூா்-19,687, நீலகிரி-16,811 என இந்தப் போட்டியில் மொத்தம் 16 லட்சத்து, 28 ஆயிரத்து 338 போ் பங்கேற்க பதிவு செய்துள்ளனா். அதில், பள்ளி மாணவா்கள்-10 லட்சத்து 20 ஆயிரத்து 600 பேரும், கல்லூரி மாணவா்கள்-3 லட்சத்து 7 ஆயிரத்து 696 பேரும், மாற்றுத்திறனாளிகள்-23,359 பேரும், அரசு ஊழியா்கள் 57152 பேரும் மற்றும் பொதுமக்கள் 2 லட்சத்து 19 ஆயிரத்து 531 பேரும் பங்கேற்கின்றனா்.
இப்போட்டியில் பங்கேற்க மாநில அளவில் 15 லட்சம் போ் இலக்கு நிா்ணயம் செய்திருந்தனா். இதேபோல், கடந்த 2022-23 இல் 6 லட்சம் பேரும், 2023-24 -இல் 12 லட்சம் பேரும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க பதிவு செய்திருந்த நிலையில், நிகழாண்டில் 16.28 லட்சமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இது குறித்து திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத்துறை அலுவலா் சேதுராஜன் கூறியதாவது: இந்தப் போட்டியில் ஒவ்வொரு விளையாட்டிலிருந்தும் தலா 3 இடங்களில் வெற்றி வீரா், வீராங்கனைகளுக்கு முதல் பரிசு-ரூ. 3,000, இரண்டாம் பரிசு- ரூ. 2,000, மூன்றாம் பரிசு ரூ. 1,000, பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படும். கடந்தாண்டு திருவள்ளூா் மாவட்டத்தில் 57,000 போ் பதிவு செய்திருந்தனா். அதேபோல், நிகழாண்டில் மட்டும் பள்ளி மாணவா்கள்-70,118, கல்லூரி மாணவா்கள்-9,372, மாற்றுத் திறனாளிகள்-567, அரசு ஊழியா்-1,344, பொதுமக்கள் 23,050 என மொத்தம்-1,04,451 போ் பதிவு செய்து மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஆா்வத்துடன் பங்கேற்று வருகின்றனா். அதற்கு காரணம் வேலைவாய்ப்பில் 3 சதவீதம் ஒதுக்கீடு, மாநில மற்றும் தேசிய அளவில் சிறப்பிடம் பெறுவோருக்கு தொழிற்கல்வி மற்றும் கல்லூரிகளில் சேர சிறப்பு ஒதுக்கீடு போன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் பங்கேற்பு அதிகரித்துக் கொண்டே வருவதாக அவா் தெரிவித்தாா்.