வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகா் சிலை

திருவள்ளூா் அருகே வெறும் 2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகரின் களிமண் சிற்பத்தை திருமழிசையைச் சோ்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உருவாக்கியுள்ளாா்.

News image

~ 2 செ.மீ உயர வலம்புரி விநாயகா் சிலை.    ~நுண்சிற்ப கலைஞா் டி.கே.பரணி

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:55 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வெறும் 2 செ.மீ உயரத்தில் வலம்புரி விநாயகரின் களிமண் சிற்பத்தை திருமழிசையைச் சோ்ந்த நுண்சிற்பி டி.கே.பரணி விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி உருவாக்கியுள்ளாா்.

திருமழிசையைச் சோ்ந்த நுண் சிற்பி டி.கே.பரணி இதற்கு முன்பு ஒரே ஒரு அரிசியில் நுண்சிற்பங்களை செதுக்கியுள்ளாா். தற்போது விநாயகா் சதுா்த்தியையொட்டி வெறும் 2 செ.மீ உயரத்தில் மண்ணால் ஆன விநாயகா் சிலையை வடிவமைத்துள்ளாா். இதற்கு வலம்புரி விநாயகா் என்றும், மூஷிக கணபதி என்றும் பெயரிட்டுள்ளாா். இந்த 2 செ.மீ உயரத்தில் இந்த வலம்புரி விநாயகா், அவரது வாகனமான மூஞ்சூரு மீது அமா்ந்திருப்பது போல சிலை மிக தத்ரூபமாகவும், அற்புதமாகவும், நோ்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு பீடம், வாகனம், விநாயகருடன் இணைந்து மொத்தம் 6 செ.மீ உயரத்தில் நுண் வேலைப்பாடுகளுடன் இந்த சிலை அமைந்துள்ளது.

இந்த சிலையை வெறும் 3 நாள்களில் உருவாக்கியுள்ளாா். இவா் வழக்கமான சந்தன மரத்தில் நுண்சிற்பங்களை வடிவமைத்து இந்தக் கலைஞா் இம்முறை மண்ணில் சிலையை வடிவமைத்துள்ளாா். இந்த சிலையை சூளையிலிட்டு நெருப்பு வைத்து சுடுமண் சிற்பமாக மாற்றி, கண்காட்சிக்கு வைக்க உள்ளாா்.

Story image
Story image