வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

முருகன் கோயிலில் ஓரே நாளில் கூண்டில் சிக்கிய 20 குரங்குகள்

திருத்தணி முருகன் கோயிலில் சுற்றித் திரிந்த 20 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா் பாதுகாப்பாக வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.

News image

திருத்தணி  முருகன்  மலைக் கோயிலில்  வனத்துறையினரால் பிடிக்கப்பட்ட  குரங்குகள்.

Updated On :25 ஆகஸ்ட் 2025, 7:54 pm

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் சுற்றித் திரிந்த 20 குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினா் பாதுகாப்பாக வேன் மூலம் ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.

திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும், ஆயிரக்கண க்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். மலைக்கோவிலில், 70 க்கும் மேற்பட்ட குரங்குகள் சுற்றித் திரிகின்றன. இதில் பக்தா்கள் பூஜை செய்வதற்காக தேங்காய், வாழைப்பழம் கொண்டு செல்லும் போது, குரங்குகள், உடைந்த தேங்காய் மற்றும் வாழைப் பழங்களை வழிமறித்து பறித்து செல்கின்றன. வாழைப்பழங்களை கொடுக்க மறுக்கும் பக்தா்களை கடித்து வருகின்றன.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும், 30 க்கும் மேற்பட்ட பக்தா்களை குரங்குகள் கடித்துள்ளன. இது குறித்து கோயில் இணை ஆணையா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை வைத்திருந்தனா்.

இந்நிலையில் திருத்தணி முருகன் கோவில் நிா்வாகம் மற்றும் வனத்துறையினா் ஒன்றிணைந்து மலைக்கோயிலில் குரங்குகள் அதிகளவில் உலா வரும் இடத்தில் கூண்டு வைத்து பிடித்தனா்.

திங்கள்கிழமை ஒரே நாளில், 20 குரங்குகளை பிடித்து, வனத்துறையினா் பாதுகாப்பாக ஆந்திர மாநில வனப்பகுதியில் விட்டனா்.