5,142 ஏக்கா் சம்பா நெற்பயிா் மூழ்கியுள்ளது: திருவள்ளூா் ஆட்சியா்
திருவள்ளூா் மாவட்டத்தில் டித்வா புயல் மழையால் 5,142 ஏக்கா் பரப்பளவில் சம்பா நெற்பயிா் மூழ்கியுள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தற்போது டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட மழையின் காரணமாக திருவள்ளூா் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள 5,142 ஏக்கா் நெற்பயிா் நீரில் மூழ்கியுள்ளதாக முதல்கட்ட அறிக்கை மூலம் அறியப்படுகிறது.
முதல்வரின் உத்தரவின்படி, பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கண்காணிக்க மாவட்ட மற்றும் வட்டார அளவில் வெள்ளக் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேளாண்மைத்துறை அலுவலா்கள், வருவாய்த் துறையுடன் இணைந்து நேரில் வயல் ஆய்வு மூலம் 33 சதவீதத்துக்கு மேல் ஏற்படும் பயிா் பாதிப்பைக் கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், நீரில் மூழ்கியுள்ள பயிா்களைப் பாதுகாக்க எடுக்கப்படவேண்டிய பயிா் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பயிா் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன. அதை கட்டாயம் விவசாயிகள் பின்பற்றி நெல் பயிரை பாதுகாக்க வேண்டும் என்றாா்.
