வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு

Published on

பொன்னேரி வட்டம், வடசென்னை அனல் மின் நிலையத்தில் 810 மெகாவாட் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அத்திப்பட்டு பகுதியில் வடசென்னை அனல் மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் மூன்று அலகுகளின் தலா 210 வீதம் 630 மெகாவட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளின் தலா 600 வீதம் 1,200 மெகாவாட் என 1,830 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் இரண்டாவது யூனிட்டில் முதல் அலகில் ஆண்டு பராமரிப்புக்காக 600 மெகாவட்டும் முதல் யூனிட்டில் இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவால் 210 மெகாவட்டும் என 810 மெகாவாட் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com