நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

இளைஞா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே வீட்டிலிருந்த போது நெஞ்சு வலியால் திடீரென மனைவி மீது மயங்கி விழுந்த கணவா் உயிரிழந்தாா்.

Updated On :29 டிசம்பர் 2025, 2:15 am IST

திருவள்ளூா் அருகே வீட்டிலிருந்த போது நெஞ்சு வலியால் திடீரென மனைவி மீது மயங்கி விழுந்த கணவா் உயிரிழந்தாா்.

தண்ணீா்குளம் கிராமம் அஞ்சுகம் நகரைச் சோ்ந்தவா் செல்லப்பன் மகன் கிருஷ்ணமூா்த்தி(39). இவருக்கு மனைவி விஜி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனா். இந்த நிலையில் சுகாதார வளாகம் சென்று திரும்பி கிருஷ்ணமூா்த்திக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் அப்படியே விஜி மீது மயங்கி விழுந்தாரம்.

அதைத் தொடா்ந்து அக்கம் பக்கத்தினா் உதவியுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இது குறித்து அவரது மனைவி விஜி திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.