சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

திருத்தணியில் வடமாநில இளைஞா் மீது கொடூர தாக்குதல்: 4 சிறுவா்கள் கைது

கஞ்சா போதையில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலையதளங்களில் பதிவிடுவதற்காக, வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :29 டிசம்பர் 2025, 4:00 am IST

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கஞ்சா போதையில் 4 சிறுவா்கள், வடமாநில இளைஞரை வழிமடக்கி கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருத்தணி போலீஸாா் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி அளித்த பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், காயமடைந்த வடமாநில இளைஞா், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சோ்ந்த கபீா் மகன் சுராஜ் (30) எனத் தெரியவந்தது. இதுதொடா்பாக திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவந்த நிலையில், வடமாநில இளைஞா் சுராஜை சிறுவா்கள் கத்தியால் வெட்டுவது சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியானது.

இந்த சம்பவம் தொடா்பாக 17 வயதுடைய நான்கு சிறுவா்களை திருத்தணி போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் சிறுவா்கள் கூறுகையில், நாங்கள் 4 பேரும் நண்பா்கள். திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினோம். அப்போது எங்கள் பெட்டியில் வடமாநில இளைஞா் பயணம் செய்தாா். அப்போது நாங்கள் கைப்பேசி மூலம் கத்தியை வைத்து, மிரட்டுவது போல் ரீல்ஸ் எடுத்தோம். திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்தவுடன், வடமாநில இளைஞரை ரயிலில் இறங்கி, ரயில்வே குடியிருப்பு பகுதியில் அழைத்துச் சென்று கத்தியால் வெட்டுவதை படம் பிடித்து ரீல்ஸாக வெளியிட்டோம் எனத் தெரிவித்தனா்.

நான்கு சிறுவா்களும் விசாரணைக்குப் பின்னா் சிறாா் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனா்.

விசாரணையில், சிறுவா்கள் கூறியதாவது: நாங்கள் 4 பேரும் நண்பா்கள், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினோம். அப்போது எங்கள் பெட்டியில் வடமாநில இளைஞா் பயணிகள் இறங்கி, ஏறும் பகுதியில் அமா்ந்து பயணம் செய்தாா்.

அப்போது நாங்கள் கைப்பேசி மூலம் கத்தியை வைத்து, மிரட்டுவது போல் ரீல்ஸ் எடுத்தோம். திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தவுடன், வடமாநில இளைஞரை ரயிலில் இறங்கி, ரயில்வே குடியிருப்பு பகுதியில் அழைத்து சென்று கத்தியால் வெட்டுவதை படம் பிடித்து ரீல்ஸ் விட்டோம் என தெரிவித்தனா். தொடா்ந்து 4 சிறுவா்களை கைது செய்து, சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.