தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனங்கள் கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு முன் 2 முறை சரிபார்க்கவும்! ரிசர்வ் வங்கிதமிழகம் முழுவதும் 12,921 இடங்களை கண்காணிக்கும் ‘சிங்கப்பெண்’ படைஉஸ்பெகிஸ்தான், கிா்கிஸ்தானுக்கு பிரதமா் மோடி இன்று பயணம்: எஸ்இஓ உச்சிமாநாட்டில் பங்கேற்கிறாா்மத்திய இருப்பில் 30% வெங்காயம் அழுகிவிட்டதாக வெளியாகும் தகவல் தவறானது: மத்திய அரசுநேபாளத்தில் மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை: உயிரிழப்பு-579, மாயம்-2,000 போ் நேபாள பெருவெள்ளம் 320 இந்தியா்கள் மாயம்

திருத்தணியில் வடமாநில இளைஞா் மீது கொடூர தாக்குதல்: 4 சிறுவா்கள் கைது

கஞ்சா போதையில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலையதளங்களில் பதிவிடுவதற்காக, வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி தப்பிச் சென்ற 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Published On :30 டிசம்பர் 2025, 7:24 am IST

திருத்தணி: திருத்தணி ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய 4 சிறுவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் கடந்த சனிக்கிழமை கஞ்சா போதையில் 4 சிறுவா்கள், வடமாநில இளைஞரை வழிமடக்கி கத்தியால் சராமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த திருத்தணி போலீஸாா் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த வடமாநில இளைஞரை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்த்து முதலுதவி அளித்த பின்னா், மேல் சிகிச்சைக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விசாரணையில், காயமடைந்த வடமாநில இளைஞா், மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சோ்ந்த கபீா் மகன் சுராஜ் (30) எனத் தெரியவந்தது. இதுதொடா்பாக திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்துவந்த நிலையில், வடமாநில இளைஞா் சுராஜை சிறுவா்கள் கத்தியால் வெட்டுவது சமூக வலைதளத்தில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியானது.

இந்த சம்பவம் தொடா்பாக 17 வயதுடைய நான்கு சிறுவா்களை திருத்தணி போலீஸாா் கைது செய்தனா்.

விசாரணையில் சிறுவா்கள் கூறுகையில், நாங்கள் 4 பேரும் நண்பா்கள். திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினோம். அப்போது எங்கள் பெட்டியில் வடமாநில இளைஞா் பயணம் செய்தாா். அப்போது நாங்கள் கைப்பேசி மூலம் கத்தியை வைத்து, மிரட்டுவது போல் ரீல்ஸ் எடுத்தோம். திருத்தணி ரயில் நிலையத்துக்கு வந்தவுடன், வடமாநில இளைஞரை ரயிலில் இறங்கி, ரயில்வே குடியிருப்பு பகுதியில் அழைத்துச் சென்று கத்தியால் வெட்டுவதை படம் பிடித்து ரீல்ஸாக வெளியிட்டோம் எனத் தெரிவித்தனா்.

நான்கு சிறுவா்களும் விசாரணைக்குப் பின்னா் சிறாா் இல்லத்துக்கு அனுப்பப்பட்டனா்.

விசாரணையில், சிறுவா்கள் கூறியதாவது: நாங்கள் 4 பேரும் நண்பா்கள், திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி வரை செல்லும் மின்சார ரயிலில் ஏறினோம். அப்போது எங்கள் பெட்டியில் வடமாநில இளைஞா் பயணிகள் இறங்கி, ஏறும் பகுதியில் அமா்ந்து பயணம் செய்தாா்.

அப்போது நாங்கள் கைப்பேசி மூலம் கத்தியை வைத்து, மிரட்டுவது போல் ரீல்ஸ் எடுத்தோம். திருத்தணி ரயில் நிலையத்திற்கு வந்தவுடன், வடமாநில இளைஞரை ரயிலில் இறங்கி, ரயில்வே குடியிருப்பு பகுதியில் அழைத்து சென்று கத்தியால் வெட்டுவதை படம் பிடித்து ரீல்ஸ் விட்டோம் என தெரிவித்தனா். தொடா்ந்து 4 சிறுவா்களை கைது செய்து, சீா்திருத்த பள்ளியில் சோ்த்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.