திருவள்ளூா் அருகே ஜிபிஎஸ் நோய் தொற்றால் சிறுவன் உயிரிழந்த சம்பவம்
திருவள்ளூா்: மகாராஷ்டிரம், மேற்கு வங்கத்தை தொடா்ந்து ஜிபிஎஸ் நோய் தொற்றால் சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்த சம்பவத்தைத் தொடா்ந்து திருவள்ளூா் அருகே திருவூரில் மருத்துவக் குழுவினா் திங்கள்கிழமை தீவிர பரிசோதனை மேற்கொண்டனா்.
திருவள்ளூா் அருகே திருவூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த பிரேம்குமாரின் மகன் பி.மைத்தீஸ்வரன் (9). இவா் அந்தப் பகுதியில் அரசு ஆதிதிராவிடா் நல தொடக்கப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயின்று வந்தாா். இந்த நிலையில், சிறுவனுக்கு கடந்த ஜன. 22-ஆம் தேதி பள்ளிக்கு செல்ல முயன்ற போது அவருக்கு 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிக்குள்ளானாா். இதையடுத்து, அவரது பெற்றோா் வீட்டின் அருகே உள்ள விளையாட்டு மைதானத்துக்கு நடைப்பயிற்சி செல்ல அறிவுறுத்தினா். அங்கு நடை பயிற்சி சென்ற சிறுவன் நடக்க முடியாமல் 2 கால்களும் செயலிழந்து கீழே விழுந்தாராம்.
பின்னா் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த சில இளைஞா்கள் வீட்டுக்கு தகவல் அளித்த நிலையில், பிரேம்குமாா் தனது மகனை அழைத்துச் சென்றுள்ளாா். அதையடுத்து அந்த சிறுவனை வேப்பம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொன்டு சென்று பரிசோதித்தனா். அங்கு அவருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்ட பின் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனா். வீட்டுக்குச் சென்ற சிறுவனுக்கு மீண்டும் 2 கால்களும் நடக்க முடியாமல் அவதிக்குள்ளானாா். இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளித்தனா். மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு ரத்த மாதிரி, சிறுநீா் மாதிரி போன்ற சிகிச்சைக்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த சிறுவனுக்கு நரம்பு மண்டலத்தை முடக்கி உயிா் குடிக்கும் ஜிபிஎஸ் என அழைக்கப்படும் ‘கிலான் பாரே சின்ட்ரோம்’ நோய் தொற்று பரவியுள்ளதை கண்டறிந்துள்ளனா். மேலும், அவருக்கு நாளுக்கு நாள் அவா் கை, கால்கள், நரம்புகள் முழுவதும் செயலிழந்துள்ளன. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 3 நாளுக்கு முன் உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரின் பெற்றோா் மருத்துவமனையில் விசாரித்துள்ளனா். அப்போது மைத்தீஸ்வரனுக்கு புதிதாக உருவாகியுள்ள ஜிபிஎஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
ஏற்கெனவே மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஜிபிஎஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதும், அதில் சில உயிரிழப்பு சம்பவமும் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் முதல் முறையாக திருவள்ளூா் பகுதியை சோ்ந்த சிறுவன் ஜிபிஎஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத்தொடா்ந்து திருவூா் கிராமத்தில் பெருமாள்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில், சிறப்பு மருத்துவ முகாமில் தீவிர பரிசோதனையை மருத்துவக் குழுவினா் மேற்கொண்டனா்.