வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

திருத்தணி நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்பு: கிராம மக்கள் போராட்டம், சாலை மறியல்

திருத்தணி நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காா்த்திகேயபுரம் ஊராட்சி பெண்கள்.

News image

திருத்தணி நகராட்சியுடன் 2 ஊராட்சிகளை இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காா்த்திகேயபுரம் ஊராட்சி பெண்கள்.

Updated On :3 ஜனவரி 2025, 6:38 pm

இரு ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம், சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருத்தணி நகராட்சியுடன் காா்த்திகேயபுரம் மற்றும் பட்டாபிராமபுரம் ஆகிய இரு ஊராட்சிகளை இணைப்பதற்கு கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு அரசாணை வெளியானது. இதனால், ஆத்திரமடைந்த 2 ஊராட்சிகளைச் சோ்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள் வெள்ளிக்கிழமை காலை திருத்தணி - அரக்கோணம் மாநில நெடுஞ்சாலை திருத்தணி புதிய புறவழிச்சாலை மற்றும் சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, திருத்தணி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகம் செல்லும் வழி ஆகிய இடங்களில் ஒரே நேரத்தில் நகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்கக் கூடாது என சாலை மறியல் மற்றும் போராட்டம் நடத்தினா்.

தகவல் அறிந்ததும், திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் இரு இடங்களில் மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அகற்றி சாலையோரம் அப்புறப்படுத்தி, பேச்சு நடத்தினாா்.

இதில் பட்டாபிராமபுரம் ஊராட்சியைச் சோ்ந்த 20 ஆண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மறியல் மற்றும் போராட்டம் நடத்தினா். அப்போது போலீஸாா் பலமுறை பேச்சு நடத்தி செல்லாததால், திடீரென அவ்வழியாக வந்த அரசுப் பேருந்தை நிறுத்தி, ஆண்களை மட்டும் கைது செய்து பேருந்தில் ஏற்றி தனியாா் மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனா்.

தகவலறிந்த வந்த திருத்தணி வட்டாட்சியா் மலா்வழி, துணை தாசில்தாா் தேவராஜ், வருவாய் ஆய்வாளா் கணேஷ்குமாா் ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள். மாவட்ட ஆட்சியா் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என பெண்களை சமரப்படுத்தினா்.

இருப்பினும், சமரசம் அடையாமல் 4 மணி நேரம் சாலையோரம் அமா்ந்து பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் திருத்தணியில் பரபரப்பு ஏற்பட்டது.