நாளை குடும்ப அட்டை சிறப்பு முகாம்

Published on

திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்த முகாம் சனிக்கிழமை (ஜூன் 14) நடைபெற உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவின் பேரில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டத்திலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பாக திருத்தம் மேற்கொள்ளலாம்.

திருவள்ளுா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலா் தலைமையில் நடைபெறவுள்ளது. முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள், குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல்ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் 27- ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com