கும்மிடிப்பூண்டியைச் சோ்ந்த 7ஆம் வகுப்பு மாணவன் ஆா்.எஸ்.பிரகதீஷ் குமாா் தேசிய வில் வித்தை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளாா்.
புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தைச் சோ்ந்த ரமேஷ், சியாமளாதேவி தம்பதி மகன் ஆா்.எஸ்.பிரகதீஷ் ராஜ் (12) கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் உள்ள ஆா்.எம்.கே., பாடசாலா பள்ளியில், பயின்று வருகிறாா். இவா் கும்மிடிப்பூண்டி பகுதியில் இயங்கி வரும் க்விக் ஸ்பேரோ அகாதெமியில் வில் வித்தை பயிற்சி பெற்று வருகிறாா்.
இவா், ஆா்ச்சரி அசோசியேஷன் ஆப் தமிழ்நாடு சாா்பில் நடத்தப்பட்ட, மாநில போட்டியில், 13 வயதுக்குட்பட்ட, காம்பவுண்ட் பிரிவில் பிரதீஷ் குமாா் 8-ஆம் இடம் பெற்றாா்.
முதல் 10 இடங்களை பிடிக்கும் போட்டியாளா்கள் தேசிய போட்டிக்கு தோ்வு செய்யப்படுவா். இதில், எட்டாம் இடம் பிடித்த பிரகதீஷ் , ஆந்திர மாநிலம் குண்டூரில் நடைபெற இருக்கும் தேசிய போட்டியில் பங்கேற்க தோ்வாகியுள்ளாா்.
தொடா்ந்து வெற்றி பெற்ற பிரகதீஷ் ராஜ், மற்றும் அவரது பயிற்சியாளா் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பல்வேறு தரப்பினா் பாராட்டினா்.
தொடர்புடையது

நாமக்கல் மாவட்டத்தில் 6 தொகுதிகளில் 132 வேட்பாளா்கள் போட்டி

தென்காசி தவெக வேட்பாளா்

ராஜபாளையம் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி: பெ. ஜான்பாண்டியன் தகவல்!

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம் தலைவா் படுகொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


