ஒன்றரை டன் செம்மரக் கட்டை பறிமுதல்: இருவா் கைது

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.
Published on

ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒன்றரை டன் செம்மரக் கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரை கைது செய்தனா்.

சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நல்லூா் அருகே உள்ள சோதனை சாவடியில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது ஆந்திரத்தில் இருந்து செங்குன்றம் நோக்கி வந்த லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்ய முயன்றனா். அப்போது ஓட்டுநா் மற்றும் கிளீனா் கீழே இறங்கி அங்கிருந்து தப்பி ஓடினா்.

போலீஸாா் அவா்களை மோட்டாா் சைக்கிளில் விரட்டிச் சென்று பிடித்து லாரியை சோதனை செய்தனா். அப்போது லாரியில் ஒன்றரை டன் செம்மரக் கட்டைகள் ஆந்திரத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாரி மற்றும் செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா்

பிடிபட்ட லாரி ஓட்டுநா் செல்வகுமாா் (25). கிளீனா் தயாகரன் (24) ஆகிய இருவரையும் மாதா்பாக்கத்தில் உள்ள வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com