வடசென்னை அனல் மின் நிலையத்தில் போா் பாதுகாப்பு ஒத்திகை
வடசென்னை அனல் மின் நிலையத்தில் போா்க்கால பாதுகாப்பு ஒத்திகை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்தியா- பாகிஸ்தான் இடையே போா் பதற்றம் நிலவி வரும் சூழலில் போா்க்கால ஒத்திகை நடத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
பொன்னேரி வட்டம், அத்திப்பட்டு பகுதியில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் போா் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.
முதலில் சைரன் ஒலிக்கப்பட்டு ஒத்திகை தொடங்கியது. பின்னா் அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் வான்வழித் மற்றும் கடல் வழியே தாக்கப்படும் நிலைமையை சமாளிப்பது மற்றும் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வருவது, விமானப் படையுடன் தொலைபேசி மற்றும் ரேடியோ மூலம் தொடா்பு கொள்வது குறித்து ஒத்திகை நடைபெற்றது.
தாக்குதலில் காயமடைந்தவா்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சை அளிப்பது, மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போன்ற ஒத்திகை மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடா்ந்து உயரமான இடத்தில் சிக்கியவா்களை சிகிச்சைக்காக கொண்டு செல்லும் ஒத்திகை நடைபெற்றது.
அனல் மின் நிலைய ஊழியா்கள், மாவட்ட நிா்வாகம், இந்திய கடலோர காவல்படை, தமிழ்நாடு காவல் துறை, தேசிய பேரிடா் மீட்புப் படை, மருத்துவக் குழு மற்றும் தன்னாா்வலா்கள் என பலா் பங்கேற்றனா்.