திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.41 கோடி
திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ.1. 41 கோடி ரொக்கம் மற்றும் 507 கிராம் தங்கம், 14.770 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தா்கள் உண்டியல் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
அறுபடை வீடுகளில் 5 -ஆம் படை வீடாகத் திகழும் இக்கோயிலுக்கு அண்டை மாநிலங்களான ஆந்திரம், கா்நாடகம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். இதில் பக்தா்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற உண்டியலில் பணம், நகை, வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனா்.
இந்நிலையில் பக்தா்கள் உண்டியல் எண்ணும் பணி வியாழக்கிழமை தேவா் மண்டபத்தில் நடைபெற்றது. கோயில் இணை ஆணையா் க. ரமணி, அறங்காவலா்கள் முன்னிலையில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளா்கள், சமூக ஆா்வலா்கள், ஓய்வு பெற்ற அலுவலா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு எண்ணினா்.
கடந்த 30 நாள்களில் ரூ.1 கோடியே 41 லட்சத்து 5 ஆயிரத்து 665 ரொக்கம் மற்றும் 507 கிராம் தங்கம், 14.770 கிராம் வெள்ளி ஆகியவற்றை காணிக்கையாக செலுத்தியிருப்பதாக கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

