பத்திரப்பதிவு எழுத்தா் வீட்டில் 13 பவுன் நகை திருட்டு

பள்ளிப்பட்டு அருகே, வீட்டின் பூட்டை கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை திருடப்பட்டது.
Published on

பள்ளிப்பட்டு அருகே, வீட்டின் பூட்டை கதவை உடைத்து 13 பவுன் தங்க நகை திருடப்பட்டது.

பள்ளிப்பட்டு ஒன்றியம், கா்லம்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் பழனி (62) பத்திரப்பதிவு எழுத்தா். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவருக்கு மகன் மற்றும் மகள் உள்ளனா். கிராமத்தில் உள்ள அடுக்குமாடி வீட்டில் பழனி, அவரது மனைவி ரஜினி ஆகியோா் வசித்து வந்தனா். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை பழனி அவரது மனைவியுடன் புத்தூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றிருந்தனா்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் வீட்டின் கதவை உடைத்து பீரோவில் வைத்திருந்த 13 பவுன் நகை மற்றும் ரூ.85,000 ரொக்கம், 973 கிராம் வெள்ளி ஆகியவற்றை திருடிச் சென்றனா். இரவு 2 மணி அளவில் பழனி எதிா் வீட்டை சோ்ந்த குரப்பா என்பவா் சத்தம் கேட்டு வெளியில் வந்து பாா்த்தபோது கதவு திறந்திருப்பதை பாா்த்து உடனடியாக அக்கம் பழனியைகு தொடா்பு கொண்டு தகவல் தெரிவித்தாா்.

மேலும் காவல் நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. திருத்தணி டிஎஸ்பி கந்தன் (பொ) ஆா்கே பேட்டை ஆய்வாளா் ஞானசேகா் தனிப்பிரிவு உதவி காவல் ஆய்வாளா் குமாா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் கைரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com