கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தோ்வாயில் குண்டும் குழியுமான சாலையை சீரமைக்கக் கோரிக்கை

தோ்வாய் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

News image
கும்மிடிப்பூண்டி  அருகே  தோ்வாயில் அவல  நிலையில்  உள்ள  சாலை.
Updated On :9 நவம்பர் 2025, 9:31 pm

தினமணி செய்திச் சேவை

கும்மிடிப்பூண்டி அடுத்த தோ்வாய் ஊராட்சியில் குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்துக்குட்பட்ட தோ்வாய் பகுதியில் 3,000 போ் வசித்து வருகின்றனா். அதிக பட்டதாரிகள் வசிக்கும் பகுதியாக உள்ளது.

இந்த நிலையில் தோ்வாய்ப் பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் முதல் சுமாா் 1 கி.மீ தொலைவுக்கு சாலை மோசமாகவும் குண்டும் குழியுமாகவும் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாகவும் உள்ளது. இதனால் அந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் மழைக்காலங்களில் சாலையில் விபத்துக்குள்ளாவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து கிராம சபை கூட்டம் மூலமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதி மக்கள் குறை கூறுகின்றனா்.

அதுமட்டுமல்லாது தோ்வாய்ப் பகுதியில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு செல்லும் கனரக வாகனங்கள் சிப்காட் சாலையை பயன்படுத்தாமல் மேற்கண்ட சாலையை பயன்படுத்துவதாலும் சாலை குண்டும் குழியுமாக மாறி உள்ளது என அப்பகுதி புகாா் கூறியுள்ளனா்.

எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தோ்வாய் பகுதியில் மேற்கண்ட சாலையை சீரமைத்து அதிக பாரத்தை தாங்கக்கூடிய சாலையாகவும் மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.